'ராஜா ராணி 2 ' சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! விஜய் டிவி வெளியிட்ட தகவல்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் நேற்றில் இருந்து, இரவு 10 மணிமுதல் 11 மணியாக மாற்றப்பட்ட நிலையில், 'ராஜா ராணி 2 ' சீரியல் நேரமும் மாற்றப்பட்டுள்ளதை விஜய் டிவி தொலைக்காட்சி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ராஜா ராணி 2 ' .
ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தியில் இருந்து டப்பிங் செய்து ஒளிபரப்பாகி வந்த 'என் கணவன் என் தோழன்' என்கிற சீரியல் ரீமேக் செய்யப்பட்டு தற்போது 'ராஜா ராணி 2 ' என ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் நாயகியாக நடிகை ஆல்யா மானசா நடித்து வருகிறார். நாயகனாக 'திருமணம்' சீரியல் ஹீரோ சித்து நடித்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே ஐபிஎஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்கிற கனவில் வளர்கின்ற நாயகி, சூழ்நிலை காரணமாக படிக்காத ஒருவரை திருமணம் செய்ய நேரிடுகிறது. குடும்பத்தினரை சமாளித்து தன்னுடைய கனவை எப்படி நிஜமாக்குகிறார் நாயகி என்பதை பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் எடுக்கப்பட்டு வரும் சீரியல் 'ராஜா ராணி 2 '.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியலில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 'ராஜா ராணி 2 ' சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 :30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், நேற்று முதல் இரவு 9 :30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.