நடிகை ராதிகா மகள் வீட்டில் நடந்த விசேஷம்... பேரன், பேத்தியுடன் குதூகலமாக இருக்கும் குடும்ப புகைப்படங்கள்...!
ராதிகாவின் மகள் ரேயான் வீட்டில் நடந்த விசேஷமும், அதில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே 2 வயதில் தாரக் என்கிற அழகிய ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.
ராதிகா சரத்குமாரின் செல்ல மகளான ரேயானுக்கு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரயன் தனது அம்மாவின் நினைவாக ‘ராத்யா மிதுன்’என பெயர் வைத்துள்ளார்.
பேத்தியைக் கொஞ்சி விளையாடும் ராதிகா, சரத்குமாரின் போட்டோக்கள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வந்தன.
தற்போது ராத்யா பிறந்து 9 மாதங்கள் ஆன நிலையில் மொட்டை அடித்து, காது குத்தியுள்ளனர். கொரோனா பரவல் என்பதால் வீட்டிலேயே சிம்பிளாக இந்த விசேஷத்தை நடத்தி முடித்துள்ளனர்.
தாத்தா சரத்குமாரின் மடியில் வைத்து மொட்டையடித்து செல்ல பேத்திக்கு காது குத்தி காதணி அணிவித்து மகிழ்ந்துள்ளனர்.
துளியும் கூட அழாமல் தாத்தாவின் மடியில் உட்கார்ந்து சமத்து பாப்பாவாக மொட்டை அடித்துக் கொள்ளும் ரேயான் மகளின் போட்டோ காண்போரை ஆச்சர்யப்பட வைக்கிறது.
ரேயான் வீட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா ஆகியோர் கலந்து கொண்டு, பேரன், பேத்தியுடன் சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
மகள், பேத்தியுடன் மட்டற்ற மகிழ்ச்சியில் ராதிகா