புஷ்பா 2 குறித்த நியூ அப்டேட்..தீயாய் பரவும் செய்தியால் குஷியான ரசிகர்கள்
புஷ்பா வெற்றியை அடுத்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புதிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

PUSHPA
செம்மரக் கடத்தல் மன்னனான புஷ்பராஜை கதையின் நாயகனாக கொண்டு உருவாகிய புஷ்பா படத்தில் தெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.
PUSHPA
சுகுமார் இயக்கிருந்த இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
PUSHPA
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா திரைப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
PUSHPA
இந்த படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்கிற பாடலில் சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார். பாடல் பட்டிதொட்டியெங்கு பட்டைய கிளப்பியது.
PUSHPA
புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையே வெளியான கே ஜி எப் 2 திரைபடம் இயக்குனர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
PUSHPA
இதையடுத்து கே ஜி எப் 2 அளவிற்கு கதையை பிரமாண்டமாக மாற்றியுள்ள இயக்குனர் சுகுமாரன் தற்போது திரைக்கதையையே பி\அதிரடியாக உருவாக்கி வருகிறார்.
PUSHPA 2
இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா 2 படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.