MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்புச்செழியன் வீட்டில் ஐடி ரைடு..சினிமா உலகை பாதிக்கும் : தயாரிப்பாளர் கே ராஜன்

அன்புச்செழியன் வீட்டில் ஐடி ரைடு..சினிமா உலகை பாதிக்கும் : தயாரிப்பாளர் கே ராஜன்

 அன்புச்செழியன் வீட்டில் ரைடு நடந்திருப்பதால் சில காலங்கள் சினிமா முடங்க கூடும் என பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

2 Min read
Kanmani P
Published : Aug 08 2022, 08:06 PM IST| Updated : Aug 08 2022, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
k.rajan

k.rajan

கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதுதான். பிரபல தயாரிப்பாளர்களான அன்புச்செழியன், கலைப்புலி தானு, எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரின் வீட்டில் சமீபத்தில் திடீர் ரைடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பின்பு தயாரிப்பாளராக முன்னேறியவர் அன்புச் செழியன். கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..."மகாகவி பாரதியார் சொன்னதை தான் நானும் சொன்னேன்"...சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன சூரி!

விஜய் நடித்த பிகில் படத்திற்கு  பைனான்சீராக இருந்த இவர் வீட்டில் அப்போது சோதனை நடந்தது. பின்னர் அவர் மீது பரபரப்பான புகார்களும் அளிக்கப்பட்டது. இது குறித்து பேசி இருந்த தயாரிப்பாளர் கே ராஜன் அன்புச் செழியன் குறைந்த வெட்டிகள் தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக கூறியிருந்தார்.

23
k.rajan

k.rajan

இந்நிலையில் சமீபத்தில் ஆதான்  youtube-க்கு  பேட்டி அளித்துள்ள பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், அன்புச்செழியன் வீட்டில் ரைடு நடந்திருப்பதால் சில காலங்கள் சினிமா முடங்க கூடும் என தெரிவித்துள்ளார். நேர்காணலில் பேசிய போது, 'நடிகர்களின் சம்பளமே 150 கோடிக்கு மேல் செல்வதால் படங்களுக்கு செலவிட முடியவில்லை என்றும், பட தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஏற்பட்டால் எந்த நடிகரும் பொறுப்பேற்பதில்லை. கொடுக்க வேண்டிய காசை கொடுத்தே தீர வேண்டும் என கண்டிப்பு காட்டுகிறார்கள் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அமலா பாலின் 'அதோ அந்த பறவை போல' ..வெளியானது ரிலீஸ் தேதி !

அதோடு தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் ராம்சரண் உள்ளிட்டோர் படங்கள் தோல்வியை சந்திக்கும்போது தயாரிப்பாளர்களுக்கு தங்களது சம்பளத்தில் இருந்து பாதி தொகையை திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள் ஆனால் இந்த மனப்பான்மை தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுக்கு கிடையாது என கூறியுள்ளார்.

33
k.rajan

k.rajan

மேலும் செய்திகளுக்கு...பிரமிக்கவைக்கும் நகையுடன் இளவரசிகள்...ஜுவல்லரி பார்ட்னர்களை அறிமுகப்படுத்திய பொன்னியின் செல்வன்

பின்னர் அன்புச் செழியன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை குறித்து பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், காய்த்த மரத்தில் தான் கல்லடி படும் அன்புச்செழியனிடம் நிறைய பணம் இருக்கிறது. அதனால் தான் அவரிடம் ரைடு நடக்கிறது. தற்போது தயாரிப்பாளரின் வீட்டில் ரைடு நடந்துள்ளதால் சினிமா உலகம் மிகவும் பாதிப்பு சந்திக்கும். இதனால் சில காலங்கள் படப்பிடிப்பு நிற்கும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளார். அதோடு ரெட் ஜெயண்ட் சரியான முறையில் திரையரங்குகளை கொடுப்பதாகவும், ஜிஎஸ்டி யை முறையாக செலுத்துவதாகவும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved