நடிகை பிரியாமணி கல்யாண வாழ்க்கையில் கணவரால் வந்த திடீர் பிரச்சனை! 4 வருடங்களுப் பிறகு சந்திக்கு வந்த சங்கதி?
கெரியரில் வெற்றிகரமாக வலம் வரும் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் திடீர் சிக்கல் வெடித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னனி நடிகையாக பிரபலமானவர் பிரியாமணி. 2007ம் ஆண்டு பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.
தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் பக்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான ‘பேமிலி மேன்’ முதல் மற்றும் இரண்டாவது சீசன் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இருதினங்களுக்கு முன்பு தான் தெலுங்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக பிரியாமணி நடித்த நரப்பா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கெரியரில் வெற்றிகரமாக வலம் வரும் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் திடீர் சிக்கல் வெடித்துள்ளது. ஆயிஷா என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு அப்பாவான முஸ்தபா ராஜ் என்பவரைத் தான் 2017ம் ஆண்டு பிரியாமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2013ம் ஆண்டே ஆயிஷாவையே முஸ்தபா விவாகரத்து செய்துவிட்டதாக கூறிவந்த நிலையில், தன்னை என் கணவர் முறையாக விவாகரத்து செய்யவில்லை என்றும், பிரியாமணியை திருமணம் செய்து கொண்ட போது நீதிமன்றத்தில் பேச்சிலர் என கூறியதாகவும் ஆயிஷா பகீர் குற்றச்சாட்டியுள்ளார்.
ஆனால் முஸ்தபா ராஜ், ஆயிஷா தன்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும், என்னிடமிருந்து பணம் பற்றிக்கவே இப்படி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டே ஆயிஷாவை பிரிந்துவிட்டதாவும், 2013ம் ஆண்டு விவகாரத்து பெற்றதாகவும் கூறியுள்ளார். 2 குழந்தைகள் முகத்திற்காக இதுவரை பிரச்சனைகளை முடிக்க பார்த்ததாகவும், இனி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரியாமணியை முஸ்தபா ராஜ் திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் முதல் மனைவி ஆயிஷா இப்படியொரு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இருப்பினும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியாமணி இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது.