கேரளா சேலையில்... கவர்ச்சிக்கு குறை வைக்காத கண் அழகி பிரியா வாரியர்! ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் போட்டோஸ்..!
புருவ அசைவில்... ஒட்டு மொத்த இளம் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகை பிரியா வாரியர் தற்போது கேரளா சேலையில் வெளியிட்டுள்ள செழிப்பான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரே இரவில்... கண் அசைவால் மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான ஒரு அடர் லவ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் படு தோல்வி அடைந்தது. பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் இவருக்கு முக்கியத்துவம் உள்ளதாக கதையில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது.
இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. அதில் ஒரு படம் மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் உருவானது.
இந்த படத்தில் டீசர் வெளியானபோது இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், இந்த படத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தடை வழங்க கூறி வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தப்பட்டது.
தற்போது தெலுங்கு சினிமாவில் செம்ம பிஸியாகியுள்ளார் பிரியா வாரியர்
மேலும் அழகில் மெருகேறி விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் கேரளத்து சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
செய்து வைத்த சிலை போல் இவர் கொடுத்துள்ள போசுகள், இளம் நெஞ்சங்களை பூசுவானமாக மாற்றும் அளவிற்கு உள்ளது.
கேரளா சேலையில் கவர்ச்சி அள்ளுதே
சுண்டி இழுக்கும் அழகில் சூப்பர் போஸ் கொடுக்கும் ப்ரியா வாரியர்