பட்டு சேலை கட்டி பொங்கலை புன்னகையால் தெறிக்கவிட்ட விஜய் டிவி தொகுப்பாளினி டிடி! கூடிக்கொண்டே போகும் அழகு!
விஜய் டிவியின் செல்ல பிள்ளை டிடி, பொங்கலை முன்னிட்டு நீல நிற அழகு மலர் போல் பட்டு சேலையில் புன்னகையை உதிர்த்து அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர். இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார்.
“ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.
சின்னத்திரையில் அளவுக்கு அதிகமான பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங். அதற்காக கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வரும் டிடி, அந்த அசத்தல் போட்டோஸையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
அப்படி தற்போது இவர் நீலம் மற்றும் பச்சை நிற புடவையில், வெளியிட்டுள்ள பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
திவ்யதர்ஷினி பேரழகில் வெளியிட்டுள்ள இந்த க்யூட் போட்டோக்கள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது.