7 வருடம் பிரிவு... மனைவியை விவாகரத்து செய்யாதது ஏன்? பீட்டர் பாலிடம் வனிதா கேட்ட நறுக் கேள்வி!
கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் தீயாக பரவி வருகிறது என்றால், அதை விட தீவிரமாகி வருகிறது நடிகை வனிதா - பீட்டர் பால் மூன்றாம் கல்யாண பஞ்சாயத்து. இந்த பிரச்சனைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட கருத்து சொல்ல போகிறேன் என, கடன்மேனிக்கு பேசி, பிரச்னையை பெரிதாக்கி விட்டனர்.
வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்ததில் இருந்தே ஒரே புகார் மயமாக இருக்கிறது. முறையாக விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக முதல் மனைவி எலிசபெத் வடபழனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்கு பதிலடியாக வனிதாவே என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என வனிதா பதில் புகார் கொடுத்தார்.
தற்போது தன்னுடைய திருமணம் குறித்து யூ-டியூப் சேனலில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சிப்பதாக கூறி சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வனிதாவே விட்டு கொடுக்க வந்தாலும், அவரிடம் மன்னிப்பு கேட்கவே முடியாது என கறாராக மறுத்துவிட்டார் என கூறப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத், “நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனது பதிலாக வனிதா வீட்டிற்கு போய் பீட்டர் பாலை இழுத்துக்கிட்டு வந்திருக்கனும். வனிதா வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் என்ன சொல்கிறாரோ, அதை தான் பீட்டர் பால் செய்கிறார். விஷயம் இவ்வளவு வெளியே தெரிஞ்ச பிறகும் ஏன் பீட்டர் பால் மக்களிடம் பேசவில்லை. எந்த பிரச்சனையும் கோர்ட்டில் தான் பார்ப்பேன் என பீட்டர் பால் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.
“போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க கூட ஏன் பீட்டர் பாலை அழைத்து வரவில்லை. ஏன் புருஷனை உன் வீட்டில் வச்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு. தரதரன்னு அடிச்சிட்டு இழுத்துக்கிட்டு வரவா?, அதுக்கும் நான் ரெடி. என பகிரங்க சவால் எல்லாம் விட்டார்.
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, திரையுலகை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்து, அதன் படி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில், வனிதாவின் வீட்டில் நடந்து முடிந்தது.
இந்த பேட்டியில், பொதுவாக மக்கள் அனைவர் மனைத்திலும் உள்ள கேள்விகளை அவர் கேட்டுள்ளார். கடந்த 7 வருடமாக இருவரும் சந்தித்துக்கொள்ள வில்லை, உங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என கூறுகிறீர்கள் பின் ஏன், முறையாக மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற வில்லை என்கிற நறுக் கேள்வி ஒன்றை வனிதா கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த பீட்டர் பால், இந்த 7 வருடங்களாக நான் இன்னொரு வாழ்க்கையை பற்றி நினைத்து கூட பார்த்தது இல்லை. எனக்கு ஏற்ற துணை ஒருவர் கிடைப்பார் என கனவிலும் நினைத்தது இல்லை. அதன் காரணமாகவே நான் அவரிடம் இருந்து விவாகரத்து பெறுவது பற்றி யோசிக்கவில்லை என பீட்டர் பால் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.