“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் ஃபேஸ்புக் அக்கவுண்ட் திடீர் முடக்கம்... வைரலாகும் கடைசி பதிவு...!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவைப் போலவே அவருடைய கடைசி முகநூல் பதிவும் சோசியல் மீடியாவில் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடங்கி பெரிதாக சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசையுடன் படிப்படியாக முன்னேறி, தற்போது விஜய் தொலைக்காட்சியிலேயே அதிக டி.ஆர்.பி. தொடரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலமாக பிரபலமானார்.
சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே பலரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கண்டு வந்தனர். அப்படியொரு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
ரசிகர்கள் மனதிலும், சக சின்னத்திரை நடிகர்கள் மத்தியிலும் புன்னகை மாறாத முகத்துடன் வலம் வந்த சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை யாராலும் நம்ப முடியவில்லை.
சித்ரா மரணம் கொலையா? தற்கொலையா? என குழப்பம் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனிடையே சித்ராவின் முகநூல் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் இரவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜே சரண்யாவுடன் பதிவிட்ட கடைசி வீடியோ தாறுமாறு வைரலானது.
அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இனி இப்படியொரு சிரிப்பை என்று காண்போம் என கதறினர். இதனிடையே விஜே சித்ராவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கடைசி பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடைசியாக 13 மணி நேரத்திற்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நடராஜன் பற்றி சித்ரா ஷேர் செய்திருந்த மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
“நடராஜன் தான் உண்மையான இன்ஸ்பிரேஷன்” என தன்னம்பிக்கையூட்டும் விதமாக பதிவிட்டுள்ள சித்ராவா? சில மணிநேரங்களில் தற்கொலை முடிவெடுத்தார் என ரசிகர்கள் பலரும் குழம்புகின்றனர்.