சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலையா?... அடுத்தடுத்து எழும் ‘அதிர்ச்சி’ கேள்விகள்...!
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சித்ராவின் மரணத்தில் எழும் பல்வேறு கேள்விகள் அவர் நிச்சயமாக தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என்ற சந்தேகத்தை அனைவரது மனதிலும் எழ வைத்துள்ளது.
விஜே சித்ராவின் தாடையில் ஏற்பட்டுள்ள காயம் சேலையில் தூக்கு போடும் போது ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி என்றால் முகத்தின் இடது பக்கத்தில் நகக்கீறல்கள் வந்தது எப்படி? என்ற கேள்வி எழுகிறது.
சித்ரா சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார் என கூறப்படும் நிலையில், அவருடைய கழுத்தில் தூக்கில் தொங்கியதற்கான எவ்வித அடையாளமும் இல்லையே ஏன்? என்ற சந்தேகம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
ஹேமந்த் ரவியை 2 மாதத்திற்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, எதற்காக குளிக்கும் போது கணவரையே அறையை விட்டு வெளியே போகச் சொன்னார் என்பது மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்புகிறது.
அப்படி சித்ரா உடை மாற்றுவதற்காக அவரை வெளியே அனுப்பினார் என வைத்துக் கொண்டாலும், அதற்கு பாத்ரூமை பயன்படுத்தியிருக்கலாமே? என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.
எப்போது செல்போனில் அதிக நேரம் பேசாத சித்ரா, அன்று மட்டும் நீண்ட நேரம் செல்போனில் பேசியிருப்பது போலீசாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்ராவின் தாயாருக்கும், ஹேமந்த் ரவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஓட்டலில் அறையெடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப பிரச்சனை தான் சித்ராவின் மரணத்திற்கு காரணமா? என்ற கேள்வி வருகிறது.
சக நடிகர்களில் இருந்து சித்ராவுடன் ஒருமுறை பேசி பழகியவர்கள் வரை அனைவரும் சொல்வது அவர் மிகவும் தைரியமானவர் என்று, அதுமட்டுமின்றி இளங்கலை உளவியல் படித்தவர். அப்படிப்பட்ட ஏன் திடீரென தற்கொலை முடிவெடுக்க வேண்டும்? என பிரபலங்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சித்ராவின் கடைசி முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்க்கும் பலருக்கும் கட்டாயம் இந்த கேள்வி எழுகிறது. இவ்வளவு தன்னம்பிக்கை, மகிழ்ச்சியுடன் இருந்த ஒரு பெண்ணா? நொடிப்பொழுதில் தற்கொலை முடிவெடுத்தார் என்பது தான் அது.