வனிதாவை பச்சை, பச்சையாய் கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்... எல்லாத்தையும் இழுத்து மூட அதிரடி முடிவு...!
வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் குறித்து சோசியல் மீடியாவில் ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்து தற்காலிகமாக இந்த பிரச்னையை ஆப் செய்துள்ளார் வனிதா.
பேட்டி ஒன்றின் போது வனிதா, பீட்டர் பால் லிப்லாக் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா கண்டபடி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” எனக்கூறியிருந்தார்.
இதை பார்த்த வனிதா உங்களுக்கு தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கும் தோணியில் பதிவிட, அந்த ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் உடனடியாக வனிதாவிடம் மன்னிப்பு கோரினார்.
இதனிடையே ஆன்லைன் லைவ் பேட்டி ஒன்றில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒன்றாக பங்கேற்றனர். அதில் வனிதாவோ, நீ என்ன பெரிய ஐகோர்ட் ஜட்ஜா?. சரி தான் போடி. உனக்கு குடும்பம் இல்லையா. நீ இயக்குநராக இருந்தால் படம் எடுடி என் வாழ்க்கையில் ஏன் தலையிடுகிற . நீ ரொம்ப பத்தினி. ஒருத்தனுக்கு ஒருத்தினு டிராமா போடாத. ஒரு புருஷன் இருப்பதால் நீ பெரிய ஒழுங்கா. என்கிட்ட பதில் சொல்லுடி, தைரியமா சொல்லுடி. நீ யாருன்னு எனக்கு தெரியும் என லட்சுமி ராமகிருஷ்ணனை சகட்டு மேனிக்கு கிழித்தெடுத்தார்.
அதே போல், பீட்டர் பால் முதல் மனைவிக்கு குரல் கொடுத்த நடிகை கஸ்தூரியையும், பிக்பாஸ் வீட்டில் அசிங்கப்பட்டது போதாதா என்றும், முதலில் நீ உன்புருஷன் கூட சேர்ந்து வாழுறத பாரு என கூறி, ஓவராகவே வார்த்தைகளை விட்டார்.
vanitha
வனிதா ஒருபெண்ணின் கணவரை, அதுவும் விவாகரத்து செய்வதற்கு முன் திருமணம் செய்து கொண்டு இப்படி பேசுறியா என, கண்டமேனிக்கு வெளுத்து வாங்கியது தாங்க முடியாமல், தற்போது வனிதா ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார்.