அப்படி என்ன இந்த சிங்க பெண் சாதிச்சாங்க? கட்-அவுட் விஷயத்தில் ரம்யா பாண்டியனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், மிகப்பெரிய கட்-அவுட் வைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.
'ஜோக்கர்' படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
தொடர்ந்து இதே போன்ற கதைக்களம் அமைந்ததால், இந்த இமேஜை மாற்ற இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
பின்னர் விஜய் டிவி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற ரம்யா பாண்டியன், 'கலக்க போவது யாரு' நடுவராகவும் மாறினார்.
விஜய் டிவிக்கு, ரம்யா பாண்டியன் நெருக்கமானவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தூங்க உள்ளதாக கூறப்பட்டதில் இருந்தே இவருடைய பெயரும் அடிபட்டு வந்தது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் இவரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் இருந்தே சரியாக விளையாடினாலும், கடை நேரத்தில் ஆரி மீது கோவத்தை காட்டியதால் இவருக்கு மக்களிடம் ஓட்டுகள் குறைந்தது.
எனினும் சிங்கப்பெண் என்கிற அடையாளத்துடன், பிக்பாஸ் இறுதிநாளில் நான்காவது போட்டியாளராக வெளியேறினார்.
வெளியில் வந்த வேகத்தில் சூர்யா தயாரித்து வரும் படத்தில், இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
தற்போது இவர், முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் வைத்துள்ள கட்-அவுட் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ய அது நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தலைவர் தரிசனம்... மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜையில் மாமனார் ரஜினிகாந்த்...!
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அப்படி இந்த சிங்க பெண் என்ன செய்து விட்டார் என விளாசி வருகிறார்கள்.
இன்னும் சிலர், பணம் இருப்பதால் சொந்த காசில் ரம்யா பாண்டியன் விளம்பரம் தேடுவதாகவும் கூறி வருகிறார்கள். மொத்தத்தில் இந்த கட் - அவுட் விஷயத்தை வைத்து, இடுப்பழகி ரம்யாவை செம்ம டேமேஜ் செய்து வருகிறார்கள்.