9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த ‘ராஜா ராணி’ கூட்டணி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா (Nayanthara), தற்போது அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ (Connect) படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா (Nayanthara). இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.
இதில் அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
திரில்லர் கதையம்சத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சத்யராஜும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். சத்யராஜும், நயன்தாராவும் கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன்பின் தற்போது தான் இணைந்து நடிக்க உள்ளனர்.