காதலர் விக்னேஷ் சிவனுடன் கரம் கோர்த்த நயன்தாரா... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Nayanthara காரணம் என்ன?
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து மாஸாக செய்துள்ள சூப்பர் காரியம் ட்விட்டர் ட்ரெண்டிங் வரை தெறிக்க விட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து மாஸாக செய்துள்ள சூப்பர் காரியம் ட்விட்டர் ட்ரெண்டிங் வரை தெறிக்க விட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'.
இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையைநயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கைப்பற்றியுள்ளது.
விக்னேஷ் சிவன் - அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அதனால் நண்பனுக்காக அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்கி வாங்கியுள்ளார்.
விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரெளவு பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள ராக்கி திரைப்படம் கொரோனா பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்து, தியேட்டர்களில் இயல்பு நிலை திரும்பிய பிறகு ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது.
காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நயன்தாரா செய்துள்ள இந்த காரியத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #Nayanthara #Rocky ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.