பட்டு புடவையில் நயன்தாரா... வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவன்... காதல் ஜோடியின் இணையத்தை கலக்கும் போட்டோஸ்...!
பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளது தமிழ் ரசிகர்களை தலை நிமிர வைத்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார்.
தற்போது நயன்தாராவும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு முழு வீச்சில் பாடுபட்டு வருகிறார். சத்தம் இல்லாமல் இருந்த ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தீயாய் வேலையை ஆரம்பித்துள்ளார்.
நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்து வரும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு இணை தயாரிப்பாளராக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராக்கி' படத்தின் விநியோக உரிமையை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.
அறிமுக இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். , “மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து, நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக, இறுதிகட்ட பணிகளில் இருந்த "கூழாங்கல்" எனும் திரைப்படத்தைப் பார்த்த போது தோன்றியது என கூட்டாக அறிக்கைவிட்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க வைக்க உள்ளதாகவும் கூறியிருந்தது.
கூழாங்கல் திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது.
இந்த விழாவில் பட்டுப்புடவையில் நயன்தாராவும், வேட்டி, சட்டையில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டுள்ளது தமிழ் ரசிகர்களை தலை நிமிர வைத்துள்ளது.
படக்குழுவினருடன் பாரம்பரிய உடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியிட்டுள்ள இந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.