காதலி நயன்தாரா இல்லாமல் நடந்த விக்னேஷ் சிவனின் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் பூஜை..!
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதல் முறையாக நடிகை சமந்தாவுடன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல் ' படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
கடந்த 6 மாதத்திற்கு முன்னரே... இந்த படம் குறித்த தகவல் வெளியாகி இருந்தாலும் கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால் அனைத்து படப்பிடிப்புகளும் முடங்கியது.
எனவே நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்காமல், ஜாலியாக தனி விமானம் மூலம், கேரளா, கோவா என பறந்தார்.
தற்போது மத்திய மாநில அரசுகள் மீண்டும் படப்பிடிப்பு துவங்க அனுமதி கொடுத்துள்ளதால், நயன் மலையாளத்தில் 'நிழல்' என்கிற படத்தில் நடித்து வந்தார். இதுகுறித்த சில புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்... சமந்தா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடிக்க உள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்', படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.
இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித் குமார், மற்றும் ஹீரோ விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காதலர் இயக்கத்தில் உருவாகும் படம் என்பதால் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட, நயன்தாரா மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.