‘நாயகி’ சீரியல் நடிகை வித்யாவா?.... இல்ல சிண்ட்ரெல்லாவின் ஜெராக்ஸா?... தேவதையாய் அழகில் மிளிரும் போட்டோஸ்...!
நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, இந்த சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வந்த 'நாயகி' தொடரில் விஜயலக்ஷ்மிக்கு பதிலாக நடித்து பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்த அவரது நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை உள்ளது.
இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்துகொண்டிருந்தார். பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கும் கிடைத்தது.
சீரியலில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து வந்த, நாயகி சீரியல் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், அதில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரம் நிறைவு பெற, நிம்மதியாக இந்த சீரியலில் இருந்து விலகினார்.
தற்போது முழு நேரமும் வெள்ளித்திரை படங்களில் நடிப்பது, மாடலிங் துறையில் கவனம் செலுத்துவது என பிசியாக இருக்கும் வித்யா, தேவதை போன்ற உடையில் கொள்ளை அழகியை வெளியிட்ட புகைப்படங்களை தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.