3வது திருமணமும் முறிவு: மீண்டும் சிங்கிளான கில்லாடி நடிகை!
Meera Vasudevan Third Divorce Announcement : ஒரே வருடத்தில் தனது 3வது திருமண வாழ்க்கைக்கு நடிகை மீரா வாசுதேவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் சிங்கிள் என அறிவித்துள்ளார். தனது விவாகரத்தை மீரா வாசுதேவனே உறுதிப்படுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் இணைந்த மீரா வாசுதேவன்
பாலிவுட் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் ஜொலித்த நடிகை மீரா வாசுதேவன், தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது மூன்றாவது திருமணத்திற்கும் குட்பை சொல்லியுள்ளார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவரை பிரிந்துள்ளார்.
நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு
தனது மூன்றாவது கணவரிடமிருந்து பிரிந்துவிட்டதாக மீரா வாசுதேவனே அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் மூலம் விவாகரத்தை அறிவித்த அவர், ஆகஸ்ட் 2025 முதல் நான் சிங்கிள், இப்போது என் வாழ்க்கையின் மிக அழகான நேரத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மீரா வாசுதேவன் 3 ஆவது திருமணம் முறிவு
மூன்றாவது கணவரான ஒளிப்பதிவாளர் விபின் பி-யிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றாரா இல்லையா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. மே 24, 2024 அன்று விபின் பி-ஐ திருமணம் செய்து கொண்டார். இது மீராவின் மூன்றாவது திருமணமாகும்.
2005ல் முதல் திருமணம்
2005-ல் மீரா வாசுதேவன் முதல் முறையாக திருமண வாழ்வில் நுழைந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை மணந்தார். இந்த திருமணம் 5 ஆண்டுகள் நீடித்தது. 2010-ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
2012ல் 2ஆவது திருமணம்
2010-ல் முதல் விவாகரத்துக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கை பற்றி யோசிக்கவில்லை. 2012-ல் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மணந்தார். இந்த திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகள் நீடித்தது. 2016-ல் இரண்டாவது திருமணமும் முறிந்தது.
மீரா வாசுதேவன்
தெலுங்கில் 'கோல்மால்' படம் மூலம் திரையுலகில் நுழைந்தார் மீரா. பின்னர் ஹிந்தி, தமிழ், மலையாளம் படங்களில் பிரபலமானார். 2005-ல் மோகன்லாலுடன் 'தன்மாத்ரா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளிலும் மீரா வாசுதேவன் பங்கேற்று வருகிறார்.