தகுதியே இல்லாதவர் கங்கனா ரணாவத்..! வாண்டடாக சென்று வம்பிழுத்த மீரா மிதுனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
எப்போதும் சர்ச்சையான கருத்தை தெரிவித்து, வாண்டடாக பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் மீரா மிதுன் இந்த முறை... கோலிவுட், டோலிவுட் நடிகைகளை விட்டு விட்டு, பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். நடிகை கங்கனா பற்றி இவர் ட்விட் ஒன்றை போட, இதை வைத்து மீராவையே சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.
ஏற்கனவே கமிட்டாகி இருந்த படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் தாறுமாறாக புகார் கூறி வந்தார். இந்த சென்னையே வேண்டாம்... நானெல்லாம் பாலிவுட் பீஸ் என மும்பைக்கு கிளம்பி போனார்.
எப்படியும் பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என, விதவிதமான கவர்ச்சி உடையில், அப்பட்டமான கவர்ச்சியில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினாலும் அதனை காதில் வாங்கி கொள்ளாமல்.. கவர்ச்சி ரணகளம் செய்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்கப்போவது உண்மை தான் என மனம் திறந்துள்ளார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும், வரும் காதலர் தினத்தில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, கொரோனா பணியில் தமிழக அரசு சரியாக செயல்பட வில்லை என்றும், அதனால் தன்னை முதலமைச்சராக ஆக்கும்படி, இவர் பிரதமர் மோடியை டேக் செய்து ட்விட் போட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இவர் செய்ததை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாததால், தற்போது பாலிவுட் நடிகை கங்கனாவை வம்பிழுத்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் போது, நடிகை கங்கனா மிகவும் தைரியமாக வாரிசு நடிகர்களை எதிர்த்தார். சம்மந்தமே இல்லாமல் இவர் இந்த விஷயம் பற்றி பேசுவதாக மீரா கூறியுள்ளார்.
அதே போல், பிரபல நடிகையும் மறைந்த தமிழக முதலமைச்சருமான, ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் நடிக்க கங்கானாவிற்கு தகுதியே இல்லை என கூறியுள்ளார்.
இவரின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் பலர், நீயும் இந்த விஷயத்தை சம்மந்தமே இல்லாமல் தான் பேசுகிறாய் என்றும், உன்னுடைய இந்த ட்விட்டை அவர் பார்த்திருக்க கூட மாட்டார் என, வழக்கு போல் வச்சு செய்து வருகிறார்கள்.