ரூ.50 லட்சத்தை மீட்டு தாருங்கள்...தடாலடி புகார் அளித்த மன்சூர் அலிகான்!
மன்சூர் அலி கான் தன்னிடம் 50 லட்சம் ஏமாற்றியவரிடம் இருந்து மீட்டு தரும்படி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
mansoor ali khan
முன்னணி நாயகர்களுடன் வில்லனாக நடித்துள்ள மன்சூர் அலிகான் . மிகவும் பிரபலம் ஏக்கத்தால பேச்சு, அசால்டான நடிப்பு என அசத்தியுள்ளார் இவர். படத்தை காட்டிலும் அரசியலுக்கு வந்த பிறகே இவர் மிகப்பிரபலமானார். வித்யாசமான பிரசாரங்களுக்கு பெயர் போனவர்.
mansoor ali khan
ஜல்லி கட்டுபோராட்டம் நடக்கையில் மெரினா பீச்சில் நடந்த போராட்டத்தின் போது கையில் விளக்குமாறை பிடித்துக் கொண்டு ரோட்டை சரக்… சரக் என்று கூட்டி தள்னினார். அதோடு கொரோனா தடுப்பூசியால் விவேக் இறந்ததாக கூறி பின்னர் நீதிமன்ற தண்டனையை சந்தித்தார்.
mansoor ali khan
தொடக்க காலத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமானுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர். பின்னர் அக்கட்சியில் இருந்து தமிழ் தேசிய புலிகள் கட்சி என்று புதிய கட்சியை ஆரம்பித்தார். இவர் நிலத்தை அபகரித்துள்ளதாக புகார் எழுந்து அவரது வீடும் சிலிடப்பட்டது.சட்டமன்ற தேர்தலில் இவரது அணுகுமுறை மக்களை கவர்ந்தாலும் தோல்வியை சந்தித்தார்.
mansoor ali khan
இந்நிலையில் தன்னை ஒருவர் ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது நிலம் வாங்குவதற்காக தந்த 50 லட்சம் ரூபாய் வரிசைக்கனி என்பரிடம் இருந்து திரும்ப பெற்று தரும்படி சென்னைஆணையர் அலுவலகத்தில் மன்சூர் அலி கான் புகார் அளித்து இருக்கிறார்.