நடிகை கௌதமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர்..! அதிரடியாக கைது செய்த போலீசார்..!
பிரபல நடிகை கௌதமி வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கொட்டிவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை கௌதமி.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா பறந்தார்.
திருமண வாழ்க்கை ஒரு வருடத்திலேயே விவாகரத்தில் முடிய, மீண்டும் தன்னுடைய குழந்தையுடன் சென்னை திரும்பினார்.
சீரியல்களில் நடிக்க துவங்கிய இவர், சில காலம் நடிகர் கமலஹாசனுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து, பின்னர் தன்னுடைய மகளின் வருங்காலம் கருதி அவரிடம் இருந்து பிரிய உள்ளதாக அறிவித்தார்.
தற்போது சென்னை கொட்டிவாக்கத்தில் மகளுடன் வசித்து வருகிறார் கௌதமி.
இந்நிலையில் இவரது வீட்டில் உள்ளே பாண்டியன் என்பவர் முழு குடி பொதியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுக்கவே அங்கு வந்த போலீசார், பாண்டியன் என்கிற நபரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் கொட்டிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடைசியாக கௌதமி, நடிகர் கமலுடன் சேர்ந்து பாபநாசம் படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் நடித்து இயக்க உள்ள, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.