MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இஸ்ரோ விஞ்ஞானியின் கண்ணீரை கண்ட பின் ஸ்கிரிப்டை மாற்றிய மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானியின் கண்ணீரை கண்ட பின் ஸ்கிரிப்டை மாற்றிய மாதவன்

'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளராக இருந்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படம்.

1 Min read
Kanmani P | Asianet News
Published : Jun 16 2022, 06:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

 ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் நடிகர் மாதவன் , முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் உரையாடிய பிறகு, படத்தின் முழு ஸ்கிரிப்டையும் எவ்வாறு மாற்ற வேண்டியிருந்தது என்பதைப் பற்றி மனம் திறந்துள்ளார் மாதவன். 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' இஸ்ரோ விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியாளராக இருந்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட திரைப்படம். உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானி நீதி பெற பல ஆண்டுகள் போராடினார் என்பதை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.

23
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

நம்பி நாராயணனுடனான உரையாடலுக்குப் பிறகு தனது கனவு திரைப்படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் எழுத வேண்டியிருந்தது என்றும் மாதவன் தெரிவித்தார். அவரைச் சந்தித்த பிறகுதான், நாராயணன் அமெரிக்காவில் உள்ள லீக் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும், மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுடன் பணிபுரிந்த அனுபவமும் அவருக்குத் தெரிந்தது என்றும் மாதவன் கூறினார் .

33
Rocketry: The Nambi Effect

Rocketry: The Nambi Effect

மேலும் நம்பி நாராயணனின் கண்களில் கண்ணீரைப் பார்த்த அன்றுதான் இந்தக் கதையை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு வந்ததாக நடிகர் கூறியதாக கூறப்படுகிறது. விஞ்ஞானி நம்பி நாராயணன் போதிய அங்கீகாரம் கிடைக்காமல், பொய்யான குற்றச்சாட்டினால் அவரது குடும்பம் சந்தித்த அவமானத்தை எவ்வளவு காயப்படுத்தி, பேரழிவிற்கு ஆளாக்கியது  என்பதை உணர முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. உண்மையை நிரூபிக்க போராடும் விஞ்ஞானியின் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது கதையை திரைப்படமாக்க முடிவு செய்ததாக நடிகர் மாதவன் மனம் திறந்துள்ளார்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved