படப்பிடிப்பின் போது படுகாயம்... “மாரி 2” பட நடிகர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி...!
காலா படப்பிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் டொவினோ நடித்த கோதா, அபியம், அனுவம், மாயநதி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தமிழிலும் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் மலையாளத்தில் காலா என்ற படத்தில் நடித்து வருகிறார். அங்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலா படப்பிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
டொவினோவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. வயிற்று பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு வயிற்று உள்பகுதியில் ரத்த கசிவு (Internal Bleeding) ஏற்பட்டதால் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் டொவினோ தாமஸ் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.