MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாடல்கள் மூலம் பாடமெடுத்த வைரமுத்து; அவர் பாடலில் ஒளிந்திருக்கும் சயின்ஸ் பற்றி தெரியுமா?

பாடல்கள் மூலம் பாடமெடுத்த வைரமுத்து; அவர் பாடலில் ஒளிந்திருக்கும் சயின்ஸ் பற்றி தெரியுமா?

கவிஞர் வைரமுத்து தன்னுடைய பாடல்களில் பல்வேறு புதுமைகளை புகுத்துவார் என்பது அனைவருக்கு தெரியும், அப்படி அவர் அறிவியல் அறிவோடு எழுதிய சில பாடல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1 Min read
Ganesh A
Published : May 22 2025, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vairamuthu Song Secret
Image Credit : Google

Vairamuthu Song Secret

சினிமாவில் பாடல்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் புதுப் பாடல்களைவிட பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. இதனால் தற்போது வரும் படங்களெல்லாம் பழைய பாடல்கள் இல்லாமல் ரிலீஸ் ஆவதில்லை. அப்படி பழைய பாடல்கள் நம்மை ஈர்த்ததற்கு அப்பாடலில் உள்ள கவித்துவமான வரிகளும் காரணம். அப்படி தமிழில் பல்வேறு மாஸ்டர் பீஸ் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வைரமுத்து, தன் பாடலின் மூலம் அறிவியல் பாடமெடுத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

24
அறிவியல் அறிவை வெளிப்படுத்திய வைரமுத்து
Image Credit : Google

அறிவியல் அறிவை வெளிப்படுத்திய வைரமுத்து

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். அப்படி அவரது இசையில் கடந்த 1991-ம் ஆண்டு வெளிவந்த படம் சிகரம். அப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து எழுதிய பாடலில் rayleigh scattering என்கிற விஷயத்தை பயன்படுத்தி இருக்கிறார். எஸ்.பி.பியின் இசையில் வைரமுத்து எழுதி வெளியான ‘வண்ணம் கொண்ட வென்னிலவே வானம் தாண்டி வாராயோ’ என்கிற பாடலில் தான் தன்னுடைய அறிவியல் அறிவை வெளிப்படுத்தி இருப்பார் வைரமுத்து.

Related Articles

Related image1
குற்ற உணர்ச்சி; கண்கலங்கிய வைரமுத்து! ஜானகி வாழ்க்கையை திருப்பி போட்டதா? ஒற்றை வார்த்தை!
Related image2
அரபிக் இதிகாசத்தில் உள்ள காதலின் 7 நிலையை ஒரே பாட்டில் கூறிய வைரமுத்து!
34
வைரமுத்து பாடலில் Physics
Image Credit : Google

வைரமுத்து பாடலில் Physics

இந்த பாடலின் பல்லவியில் வைரமுத்து ஒரு வரி எழுதி இருப்பார். அது என்னவென்றால், ‘நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை’ என்கிற வரி. இந்த வரியில் தான் rayleigh scattering அடங்கி உள்ளது. வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது என்றால், சூரிய ஒளி வரும்போது, அதில் ஏற்படும் ஒளிச்சிதறல்கள் காரணமாக தான் வானம் நீல நிறத்தில் இருக்கிறது என்கிற அறிவியலை இந்த பாடலில் மிக அழகாக ஒரே வரியில் எழுதி இருக்கிறார் வைரமுத்து.

44
வைரமுத்து பாடல் கற்றுத்தரும் அறிவியல்
Image Credit : Google

வைரமுத்து பாடல் கற்றுத்தரும் அறிவியல்

அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இடம்பெற்ற இன்னிசை பாடி வரும் பாடலிலும் பல்லவியிலேயே சயின்ஸை எழுதி இருப்பார் வைரமுத்து. அப்பாடலில் ‘காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை’ என்கிற வரி இடம்பெற்று இருக்கும். காற்றின் மூலம் பயணிக்கும் ஒலி அலைகளினால் தான் நம்மால் சத்தங்களை கேட்க முடிகிறது என்கிற அறிவியலை இந்த பாட்டின் பல்லவியிலேயே ஒரே வரியில் புரியும் படி எழுதி இருக்கிறார் வைரமுத்து.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்ப் பாடல்கள்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved