MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள்; பிரபல கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்டதன் சுவாரஸ்ய பின்னணி!

ரஜினி படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள்; பிரபல கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்டதன் சுவாரஸ்ய பின்னணி!

ரஜினி படத்திற்காக கவிஞர் வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல் வரிகள் திருச்சி அருகே உள்ள பிரபல கோவில் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது பற்றி பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Sep 30 2024, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Lyricist Vaali

Lyricist Vaali

தமிழ் சினிமாவில் அதிகப்படியான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் என்றால் அது வாலி தான். இவர் தன்னுடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பாடல்களை எழுதி இருக்கிறார். இத்தனை பாடல்களை எழுதி இருந்தாலும் அவர் தான் எழுதியதாக பெருமை கொண்டது ஒரே ஒரு தமிழ் பாடல் தான். அந்த பாடலின் சிறப்பு பற்றியும், அப்பாடல் வரிகளை புகழ்பெற்ற கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டது பற்றியும் பார்க்கலாம்.

24
Vaali Song secret

Vaali Song secret

1992-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் மன்னன். இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என தன் தாயின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரஜினி பாடும் பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்த பாடலுக்கு இளையராஜாவின் இசை ஒரு பிளஸ் என்றால் மற்றொரு பிளஸ் யேசுதாஸின் தெய்வீகக் குரல். இந்த பாடல் தான் வாலியின் பேவரைட் பாடலாம்.

இதையும் படியுங்கள்... தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் எது தெரியுமா?

34
Trichy Iyappan Temple

Trichy Iyappan Temple

இந்தப் பாடலின் வரிகளை தான் திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் கல்வெட்டில் செதுக்கி வைத்திருக்கிறார். அந்த பாடல் வரிகளை செதுக்கியது மட்டுமின்றி அந்த கல்வெட்டின் அருகிலேயே ஒரு ஸ்விட்ச் ஒன்றும் இடம்பெற்று இருக்குமாம். அந்த ஸ்விட்சை ஆன் செய்தால், அந்தப் பாடலும் ஒலிக்குமாம். அதுமட்டுமின்றி அந்த பாடலை ஒலிக்கவிட்டு கண்ணை மூடி தியானம் செய்தால், மெய்மறந்து பழைய நினைவுகளுக்கே எடுத்துச் செல்லுமாம்.

44
Amma Endralaikatha song from mannan

Amma Endralaikatha song from mannan

அதுமட்டுமின்றி தங்கள் தாயின் பழைய நினைவுகளையும் அது கண்முன் கொண்டுவருமாம். இந்த பாடலுக்காக கவிஞர் வாலி பெருமைகொள்ள மற்றொரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த பாடல் வரிகள் பதிக்கப்பட்ட அதே கோவிலில் ராஜாஜி எழுதிய ‘குறை ஒன்றும் இல்லை கண்ணா’ என்கிற பாடல் வரியும் பதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பாடலை தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பாடலாக கருதினாராம் கவிஞர் வாலி.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை விட டாப் குக் டூப் குக் டைட்டில் வின்னருக்கு கிடைத்த காஸ்ட்லி கிஃப்ட் - என்ன தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved