நாமம் வைத்திருந்தால் சரியான... படித்த தந்தை... சர்ச்சையில் சிக்கிய கோமாளி பட இயக்குனர்
நாமம் போட்டால் சரியான, படித்த தந்தை போல் தெரிவார் என்பதற்காகவே குறும்படத்திலும் இதை ஏற்றுக் கொண்டேன் என பதில் அளித்துள்ளார்.

love today
சமீப காலமாகவே மதம் மற்றும் ஜாதி குறித்து பேசுவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல பிரபலங்களும் இது குறித்து பேசுவதால் சர்ச்சையிலும் சிக்கி விடுகின்றனர். அந்த வரிசைகள் தற்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஜாதி குறித்து பேசி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கியிருந்தவர் பிரதீப் ரங்கநாதன். வாட்சப் காதல் என்னும் குறும்படத்தின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர்.
இதை தொடர்ந்து காஜல் அகர்வால், ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. தற்போது லவ் டுடே என்னும் படத்தை இயக்கி, நாயகனாக அறிமுகமாகிறார் பிரதீப். திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
love today
படம் தொடர்பாக ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி அளித்த பிரதீப் ரங்கநாதன் பேசியிருந்தது தான் தற்போது இவரை மேலும் பிரபலம் ஆக்கி உள்ளது என்றே கூறலாம். அந்த பேட்டியில் குறும்படத்தில் ஹீரோவாக பிராமணராக இருப்பவரை காண்பித்திருக்கிறீர்கள். அதேபோல கோமாளி படத்தில் பள்ளியில் அட்மிஷினில் ஜாதி பற்றி குறிப்பிடாதது, மேட்ரிமோனியில் ஜாதி பெயர் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை நீங்கள் மேற்கோள் காட்டி இருப்பீர்கள் இது எதிர்ச்சியாக நடைபெற்றதா அல்லது உங்களுடைய எண்ணமா? என கேட்டுள்ளனர்.
baakiyalakshmi : இனியாவை நினைத்து உருகும் கோபி...செம கடுப்பில் இருக்கும் ராதிகா..இன்றைய எபிசோட்...
love today
அதற்கு பதில் அளித்துள்ள பிரதீப், வாட்ஸப் காதல் குறும்படத்தை எடுக்கும்போது நான் அந்த நாயகனின் சட்டையை கழட்ட சொன்னேன். அப்போது அவர் பூணூல் அணிந்து இருந்தார். அதை கழட்டாமல் நடிக்கச் சொன்னேன். இதன் காரணமாக குறும்படமும் தவறாகவில்லை. பிராமணராக இருந்தால் என்ன தவறு என கேட்டுள்ளார்.
அதோடு கோமாளி படத்தில் கதை என்னவென்றால் உலகில் பல விஷயங்கள் மாறினாலும் ஜாதி மற்றும் உணர்வுகள் மாறவில்லை என்பதே அதன்படி தந்தையின் பழக்கத்தை மகன் அப்படியே மேற்கொள்கிறார் என்பதை காட்டவே பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிடாமல் இருக்கும் காட்சியை வைத்ததேன் என கூறியுள்ளார்.
love today
தான் ஜாதி குறித்து அறிந்ததே பள்ளி விண்ணப்பத்தில் குறிப்பிடும்போது தான். எனது அம்மா அட்மிஷன் பார்மில் எனது ஜாதி குறித்து குறிப்பிட்டிருந்தார். அப்போது அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். பின்னர் அனைத்து வகுப்புகளிலும் இதே தொடர்ந்தது. அதோடு பள்ளி வகுப்பறையில் ஜாதி குறித்தும், எந்த ஜாதியினர் இந்த வேலை பார்ப்பவர்கள் என்பது குறித்தும் விவாதிப்பதுண்டு. தற்போது நினைத்தால் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.ஆனால் அதிக பேர் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் அவர்கள் மேலே கொண்டு வர இதுபோன்ற ஜாதிமுறையாக பிரிப்பது தவறு இல்லை என கூறியுள்ளார்.
love today
மேலும் லவ் டுடே படத்தில் சத்தியராஜ் ஐயங்காரராக வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதீப் சத்தியராஜை அப்படி காட்ட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் கண்டிப்பான, சடங்குகளை தீவிரமாக மேற்கொள்ளும் தந்தையாக காட்டுவதற்காகவே அவரை அப்படி காண்பித்தேன். நாமம் போட்டால் சரியான, படித்த தந்தை போல் தெரிவார் என்பதற்காகவே குறும்படத்திலும் இதை ஏற்றுக் கொண்டேன் என பதில் அளித்துள்ளார். இதனால் இவர் மீதும், இவர் கருத்து மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளது.