பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபின் லாஸ்லியா சேர்த்த சொத்துக்கள் இத்தனை லட்சமா? கசிந்த தகவல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் இதோ..
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த பிரபலங்களில் ரசிகர்களையும், மக்களையும், அதிகப்படியாக கவர்ந்த பிரபலங்களில் லாஸ்லியாவும் ஒருவர்.
குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது லாஸ்லியாவிற்கு தமிழ் பட வாய்ப்புகள் கதவை தட்ட துவங்கியுள்ளது.
அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக ன் நடிக்கும், 'Friednship ' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். மற்றொரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
லாஸ்லியா அறிமுக நடிகையாக இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு இருந்த வரவேற்ப்பிற்காகவே, ஆரியுடன் நடிக்கும் படத்திலும், ஹர்பஜன் சிங்குடன் நடிக்கும் படத்திற்கும் சுமார் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
அதே போல் புதிதாக கமிட் ஆகியுள்ள படத்திற்கு, இந்த இரண்டு படங்களை விட, அதிக சம்பளம் பெற்றுள்ளாராம்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், சுமார் 50 லட்சம் வரை, லாஸ்லியா சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்றாலும், இப்படி ஒரு தகவல் உலா வருகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை லாஸ்லியா தான் கூறவேண்டும்.