MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரசிகர்களை ஏமாற்றிய அல்லு அர்ஜுன்... புஷ்பா படத்தில் இப்படி ஒரு லாஜிக் மீறலா? - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

ரசிகர்களை ஏமாற்றிய அல்லு அர்ஜுன்... புஷ்பா படத்தில் இப்படி ஒரு லாஜிக் மீறலா? - இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

Pushpa movie : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா படத்தில் மிகப்பெரிய லாஜிக் மீறல் இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Jul 31 2022, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் புஷ்பா. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.

25

அதுமட்டுமின்றி இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு சமந்தா ஆடிய ஐட்டம் சாங்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வாறு பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

35

இந்நிலையில் புஷ்பா படத்தில் உள்ள மிகப்பெரிய லாஜிக் மீறல் பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி புஷ்பா படம் செம்மரக்கடத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற செம்ம மாஸான சீன் என்றால் அது, நடிகர் அல்லு அர்ஜுன் போலீஸ் ரைடு வருவதை அறிந்ததும், குடவுனில் பதுக்கி வைத்திருந்த செம்மரங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் ஆற்றில் தூக்கி போட்டுவிட்டு தப்பிக்கும் காட்சி தான்.

இதையும் படியுங்கள்....சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு ‘ராக்கி’யை களமிறக்கிய நெல்சன்- ரஜினியின் ஜெயிலர் படத்தில் நிகழ்ந்த அதிரடிமாற்றம்

45

இந்த சீனில் தான் லாஜிக் மீறலே உள்ளது. பொதுவாக மரங்கள் அனைத்தும் தண்ணீரில் போட்டதும் மிதக்கும் தன்மை கொண்டது என்பது நமக்கு தெரியும். ஆனால் செம்மரம் மட்டும் தண்ணீரில் போட்ட உடனே மூழ்கிவிடுமாம். அப்படி இருக்கையில் புஷ்பா படத்தில் செம்மரக் கட்டைகள் தண்ணீரில் மிதந்து செல்வது காட்சிப்படுத்தி உள்ளதை நெட்டிசன்கள் தற்போது விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

55

இந்த லாஜிக் மீறல் தற்போது வெளிச்சத்துக்கு வர முக்கிய காரணம் ரவிதேஜா நடிப்பில் அண்மையில் வெளியான ராமாராவ் படம் தான். இப்படத்தில் தான் செம்மரம் தண்ணீரில் மூழ்குவதைப்பற்றியும், அதையே கடத்தல் காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது பற்றியும் காட்சிப்படுத்தி இருந்தனர். இதைப் பார்த்த பின்னர் தான் புஷ்பா படக்குழு ரசிகர்களை எந்த அளவு ஏமாற்றி உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்.... சிங்கிள் பிளீட் சேலையில்... ஜிமிக்கி கம்மல் அழகி சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
ராஷ்மிகா மந்தனா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved