MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இலங்கைக்கு பிளாக் பாண்டி செய்த உதவி.. கப்பல் சேவை கொடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்!

இலங்கைக்கு பிளாக் பாண்டி செய்த உதவி.. கப்பல் சேவை கொடுப்பதாக உறுதியளித்த அமைச்சர்!

பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி இருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,'ங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஆவன செய்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.

2 Min read
Kanmani P
Published : Jun 27 2022, 05:16 PM IST| Updated : Jun 27 2022, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
block pandi

block pandi

பாண்டி தமிழ்நாட்டின் நகைச்சுவை நடிகர் ஆவார்.  தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் சேருவதற்கு முன்பு சில படங்களில் சிறு வேடங்களில்  இவர் ஸ்டார் விஜய்யில் பிரபலமான கானா காணும் காலங்கள் இல் "பாண்டி" என்ற பாத்திரத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 இல் பங்கேற்றார். பின்னர்கடந்த  2010 இல் அங்காடி தெரு மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

25
block pandi

block pandi

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் பிளாக் பாண்டி. சிறுவேடங்களில் நடித்த போதிலும் இவர் உண்மையில் மிகப்பெரிய மனது படைத்தவராக உலா வருகிறார். இவர் உதவும் மனிதம் என்ற அமைப்பை உருவாக்கி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உதவி வருகிறார். இதன் மூலம் கஷ்டப்படும் பலருக்கும் சத்தமில்லாமல் உதவி செய்துவருகிறார். இவரது அமைப்புக்கும் பின்புலமாக  இயக்குனர் சமுத்திரகனி.

மேலும் செய்திகளுக்கு.. 30 வது ஆண்டில் அண்ணாமலை..ரஜினிகாந்த் சந்தித்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா !

35
block pandi

block pandi

உதவும் மனிதம் அமைப்பின் மூலம் சாலையோரம் வாழ்ந்து வருபவர்களுக்கு உணவு, படிப்பு செலவு, மருத்துவ செலவு, இறுதிச் சடங்கிற்கிற்கான  உதவி செய்து வருகிறார். ஆனால், இவர் இதுவரை அதனை பெரிதாக விளம்பரப்படுத்தியது கிடையாது. இந்நிலையில் இலங்கைக்கு தன் அமைப்பின் மூலம் உதவ முன்வந்து இருக்கிறார் பிளாக் பாண்டி.

மேலும் செய்திகளுக்கு.. டாப் 10 நாயகியாகும் பிரியா பவானி..முன்னணி ஹீரோக்களுடன் இத்தனை படங்களா?

45
block pandi

block pandi

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. . அங்குள்ள மக்கள் அன்றாட பிழைப்பிற்கே மிகவும் சிரமப்படும்  நிலை ஏற்படுள்ளது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை பாண்டி அனுப்பியிருந்தார். 

மேலும் செய்திகளுக்கு..ருத்ரன் படத்திற்காக எடையை ஏற்றிய ராகவா லாரன்ஸ்..எவ்வளவு கிலோ தெரியுமா?

55
black pandi

black pandi

பிளாக் பாண்டியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி இருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,' தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது. நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் ‘உதவும் மனிதம்’ வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.  உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஆவன செய்கிறேன் என உறுதி கூறியுள்ளார்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved