KS Ravikumar: நீலாம்பரியின் 26 வருட ரகசியத்தை உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், 'படையப்பா' படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆன பின்னர், இந்த படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கதாபாத்திரத்தோட இன்ஸபிரேஷன் யாருனு முதல் முறையா சொல்லி இருக்காங்க.

26 வருடத்திற்கு பின் கே எஸ் ரவிக்குமார் கூறிய தகவல்:
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'படையப்பா'. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன் இரண்டாவது நாயகியாக நடிக்க, சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, சத்யபிரியா, மன்சூர் அலிகான், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது.
படையப்பா கதைக்களம்:
மெக்கானிக்கல் இன்ஜினீயரான படையப்பா (ரஜினிகாந்த்) , சொந்த ஊருக்கு வரும் போது, ஏழை பெண்ணான வசுந்தரா (சொந்தர்யா) மீது காதல் கொள்கிறார். ஆனால் நீலாம்பரி படையப்பாவை விரும்ப ஆரம்பிக்கிறார். நீலாம்பரியின் அண்ணனுக்கும், படையப்பாவின் தங்கைக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தர்மலிங்கத்திடம் (சிவாஜி கணேசன்) இருந்து அனைத்து சொத்துக்களையும் அவருடைய தம்பி ராமலிங்கம் (மணிவண்ணன்) பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்ப, படையப்பா குடும்பத்திடம் பணம் காசு எதுவும் இல்லாததை அறிந்து, ராமலிங்கத்தை நீலாம்பரியின் அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார்.
வேலைக்காரி வசுந்த்ராவை திருமணம் செய்யும் படையப்பா:
பின்னர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என படையப்பாவிடம் அவரின் அப்பா கோரிக்கை வைக்க, படையப்பாவின் அம்மா சாவித்திரி (லட்சுமி) மகன் மனதில் உள்ளதை அறிந்து நீலாம்பரி வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் வசுந்தராவை தன்னுடைய மகனுக்கு, திருமணம் செய்து வைக்கிறார்.
ரஜினிகாந்தை விட, அதிகம் பேசப்பட்டது நீலாம்பரி :
சொத்துக்களை இழந்த, படையப்பா பெயரில் அவனுடைய அப்பா வாங்கிப்போட்ட ஒரு மலை கிராண்ட் மலை என தெரியவருகிறது. மேலும் வீட்டுக்குள்ளேயே அடைபடும் நீலாம்பரி வீட்டை விட்டு வெளியே வந்து, வில்லத்தனத்தில் மிரள வைக்கிறார். ரஜினிகாந்துக்கு எதிராக இவர் நடித்த காட்சிகள் திரையரங்கையே தெறிக்கவிட்டது. இந்த படத்திற்காக ரஜினிகாந்தை விட, அதிகம் பேசப்பட்டது நீலாம்பரி கதாபாத்திரம் தான்.
நீலாம்பரி கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன்:
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 26 வருடங்கள் ஆகும் நிலையில் இந்தப் படம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில், இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் யார் என்பதை கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அதாவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் இந்த படத்தின் இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார். இது அவருக்கும் தெரியும் என்றும், 'படையப்பா' படத்தை பார்த்துவிட்டு, நீலாம்பரி ரோல் ஹை லைட்டாக இருந்ததாக தெரிவித்தார் என்பதையும் பகிர்ந்துள்ளார்.