KGF நாயகனின் அழகிய குடும்பம்.. மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய யாஷ்..
இன்று பிறந்தநாள் கொண்டாடும் KGF நாயகன் யாஷ்.. தனது மனைவி குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
yash family photo
யாஷ் என அறியப்பட்ட நவீன் குமார் கவுடா கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னை நடிகராக வலம் வருகிறார்..இவருக்கு அங்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு..
yash family photo
கன்னட நடிகராக இருந்த யாஷ் கேஜிஎப் என்கிற பிரமாண்ட படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார்...
yash family photo
KGF க்கு பிறகு பின்னாளில் அவரது படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகவே வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
yash family photo
சீரியல்களில் 500 ரூபாய் சம்பளத்திற்காக நடித்து வந்த யாஷ் தற்போது கன்னட சினிமாவின் ஐகானாக மாறியிருக்கிறார். இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
yash family photo
யாஷ் கடந்த 2016-ம் ஆண்டு Radhika Pandit என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
yash family photo
தற்போது யாஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2வது பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
yash family photo
நாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்த அந்த டீசரில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
yash family photo
நாயகன் யாஷின் பிறந்தநாளான இன்று KGF 2 திரைக்கு வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை திருநாள் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
YASH FAMILY
யாஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் "பிறந்தநாள் என்னை ஒருபோதும் உற்சாகப்படுத்தியதில்லை.. ஆனால் என்னை சுற்றி இருக்கும் மகிழ்ச்சி, குறிப்பாக என் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் இருக்கும் போது அது என்னை உற்சாகப்படுத்துகின்றது. உங்களின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒவ்வொருவருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள்." என்று தெரிவித்துள்ளார்.