ஹாலிவுட் நாயகர்களுடன் களமிறங்கும் கேஜிஎப் 3..பாகுபலி வில்லனும் இருக்காராம்...
மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ள கேஜிஎப் 3-ல் ஹாலிவுட் நாயகர்களை வில்லன்களாக கமிட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
kgf 2
2018-ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தக்க வெற்றியை பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகம் கடந்த 4 ஆண்டுகளாக உருவானதை அடுத்து கடந்த மாதம் திரைக்கண்டது.
kgf 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன.
kgf 2
இதில் வில்லங்களாக முதல் பாகத்தில் கருடாவாக ராம் சந்திர ராஜுவும் இரண்டாம் பாகத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் அதீரா கதாபாத்திரத்தை வந்து மிரட்டி இருந்தனர்.
kgf 2
இந்த இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி உலகமுழுவதும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி மாஸ் காட்டியிருந்து.
kgf 2
உலக ரசிகர்களை கவர்ந்த கேஜிஎப் 2 இதுவரை 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி காரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
kgf 2
கேஜிஎப் இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் டப்பிங் படம் என்னும் பெயரை தட்டி சென்றுள்ளது.
kgf 2
இந்த பாகத்தின் இறுதியில் 3-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. அடுத்த வருடம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த பாகம் மிக பிரமாண்டமாக டிவிஸ்டுகள் நிறைந்ததாக உருவாகும் என தெரிகிறது. அதோடு வில்லன் தேர்வும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம் .
kgf 2
இரண்டு பாகத்தை போலவே இதிலும் சூப்பர் வில்லங்களாக நடிக்க ஹாலிவுட் நாயகர்களிடம் கேஜிஎப் குழு பேசி வருவதாகவும். சமீபத்திய தகவல் படி கேஜிஎஃப் 3 இல் பாகுபலி வில்லன் ராணா டகபதியுடன்தயாரிப்பாளர்கள்பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது..