கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட வாய்ப்பை உதறி தள்ள இது தான் காரணமா? புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் பட வாய்ப்பை உதறி தள்ள இது தான் காரணமா? புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து திரைப்படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதே நேரத்தில், கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் தேடி வந்தது.
பல நடிகைகளுக்கும், மிக பெரிய கனவாக இருக்கும் பாலிவுட் வாய்ப்பு இவருக்கு குறுகிய காலத்தில் கிடைத்தது இவருக்கு அடித்த அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட்டது.
அஜய் தேவ்கான் நடிப்பில், 'Maidaan ' என்கிற பெயரில் உருவாகும் இந்த படத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் கீர்த்தி.
இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து, நியூ லுக்கிற்கு மாறினார்.
கால்பந்து வீரர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் இருந்து, திடீர் என விலகினார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதில் ப்ரியாமணி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து இவர் விலக காரணம், ஒரு ஷாட்டில் பிகினி உடையில் நடிக்க வேண்டும் என படக்குழு கூறியுள்ளது. ஆனால் அது போன்ற உடைகள் போட்டால் தனக்கு மிகவும் செக்சியாக இருக்கும் என கூறி அந்த படத்தில் இருந்ததே கீர்த்தி சுரேஷ் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ்... இந்த காரணத்தால் தான் விலகினார் என்று ஒரு தகவல் வெளியானதால், கீர்த்தியின் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகிறார்கள்.