கீர்த்தி சுரேஷ் திருப்பதியில் சுவாமி தரிசனம்..! ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு..!
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருவரும் ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. இவர் நடித்து முடித்துள்ள 'குட்லக் சகி' மற்றும் , 'மரைக்கார்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வந்த போதுதான், படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் அனைவரும் மீண்டும், சென்னைக்கே திரும்பினார்.
இந்த படத்தை தொடர்ந்து, செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள 'சாணி காகிதம்', தெலுங்கில் 'ராங் தீ', உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திடீர் என இன்று, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில், தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர்.
இதே போல் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு தன்னுடைய மகனுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
பிரபலங்கள் கோவிலுக்கு வந்ததை அந்த ரசிகர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக கோவில் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.