கடற்கரையில் அன்பானவரை கட்டி பிடித்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்களை ஏங்க வைத்த வைரல் போட்டோஸ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு பிடித்த ஒருவரை கட்டி பிடித்தபடியும், அவருடன் விளையாடிய படியும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நாய் குட்டி நைக்குடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
நைக்குடன் மனதை அள்ளும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து... ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.