கிழிந்த பேண்டில்... துபாயை கலக்கும் கீர்த்தி சுரேஷ்.....! நண்பர்களுடன் அரட்டையடித்த ரணகள போட்டோஸ்..!
லாக்டவுனுக்கு பின், பல நடிகைகள் மாலத்தீவிற்கு படை எடுத்து வரும் நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்களுடன் துபாய்க்கு சென்று என்ஜாய் செய்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்களை கீர்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்களை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.
தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் வீட்டில் பெற்றோர் மற்றும் தனது செல்ல நாய்குட்டிகளுடன் பொழுதை கழித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது உடற்பயிற்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
பின்னர் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் ஓணம் மற்றும் சென்னையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானது.
இந்நிலையில் கொரோனா பிரச்சனைக்கு பின், வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது துபாயில் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
கிழிந்த பேண்ட், கலர் ஃபுல் டி-ஷர்ட்... மாடர்ன் டிரஸ் என விதவிதமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
துபாயில் இருந்து வந்த பின்னர் மீண்டும், அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.