- Home
- Cinema
- நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
நிலத்தில் தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷம்.. சிவனாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!
Karthigai Deepam 2 serial: ஜீ தமிழில் பல்வேறு திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 தொடரில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

அதிர்ச்சியில் சிவனாண்டி:
இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி நிலத்தில் டெட் பாடி இருப்பதாக சொல்லி தோண்ட தொடங்கிய நிலையில், தோண்ட தோண்ட கடைசியில் சாமி சிலை கிடைப்பதால் அனைவரும் பரவசமடைகிறார்கள். ஆனால் சிவனாண்டி அண்ட் கோ உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
புண்ணிய பூமி:
கார்த்திக் தன்னுடைய பங்கிற்கு, இங்க பாருங்க நிலத்தில் இருந்து சாமி சிலை தான் கிடைத்து இருக்கு. இது புண்ணிய பூமி என்று சொல்ல ஊர் மக்களும் அதை ஏற்று நம்புகிறார்கள்.
சம்மதம் சொல்லும் சாமுண்டீஸ்வரி:
பின்னர் இந்த இடத்தை எழுதி கொடுக்க ராஜராஜன் மற்றும் சாமுண்டீஸ்வரி கையெழுத்து போட வேண்டும் என்பது தெரிய வருகிறது. ஊர் மக்கள் எல்லாரும் கேட்டுக்கொள்வதால், சாமுண்டீஸ்வரியும் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு கையெழுத்து போட்டு நிலத்தை ஹாஸ்பிடல் கட்ட எழுதி கொடுக்கிறாள்.
பழி தீர்ப்பானா சிவனாண்டி:
இப்படியான நிலையில், அடுத்து நடக்கப்போவது என்ன? கார்த்திக்கை பழி தீர்க்க சிவனாண்டி என்ன செய்வார் என்பதை அறிய கார்த்திகை தீபம் 2 சீரியலை தொடர்ந்து பாருங்கள்.