MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாலியின் பாடல் வரிகளால் இம்பிரஸ் ஆகி... விஸ்கியை பரிசாக கொடுத்த கண்ணதாசன்!!

வாலியின் பாடல் வரிகளால் இம்பிரஸ் ஆகி... விஸ்கியை பரிசாக கொடுத்த கண்ணதாசன்!!

கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை கேட்டு மெர்சலான கண்ணதாசன் அவருக்கு விஸ்கி ஒன்றை பரிசாக வழங்கிய சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2024, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vaali, Kannadasan

Vaali, Kannadasan

தமிழ் சினிமாவில் கடந்த 1968-ம் ஆண்டு வெளிவந்த படம் கண்மலர். இப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, செளகார் ஜானகி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் கதைப்படி வி நாகய்யா கோவிலில் ஓதுவாராக இருப்பார். இவரின் மகளாக சரோஜா தேவி நடித்திருப்பார். அவர் கோவிலில் மாலை கட்டி படைக்கும் வேலையை செய்து வருவார். சரோஜா தேவியின் தோழியாக செளகார் ஜானகி நடித்திருப்பார்.

25
vaali

vaali

ஒரு கட்டத்தில் நாகய்யா இறந்துவிட, தனிமையில் வாழும் சரோஜா தேவிக்கு ஜெமினி கணேசன் மீது காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு தடை வந்துவிடுவதோடு சரோஜா தேவிக்கு கண்பார்வையும் போய்விடும். தன் தோழியின் மீது கொண்ட நட்பால், தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் செளகார் ஜானகி, தான் இறந்த பின்னர் தன் கண்ணை எடுத்து சரோஜா தேவிக்கு வைத்துவிடச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். கண்மாற்று அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் இப்படம் எடுக்கப்பட்டது.

35
kannadasan

kannadasan

இந்தப் படத்தில் கவிஞர்கள் வாலி மற்றும் கண்ணதாசன் இருவருமே பாடல்களை எழுதி இருந்தனர். அப்படி கண்மலர் படத்தில் இடம்பெறும் ‘ஓதுவார் உன் பெயர் ஓதுவார்’ என்கிற பாடலை கேட்ட கண்ணதாசன் நானா இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறேன் என்று தனது உதவியாளரிடம் கேட்க, அதற்கு அவர், இது வாலி எழுதிய பாட்டு ஐயா என சொன்னதும், மெய்சிலிர்த்து போன கண்ணதாசன், உடனடியாக வாலிக்கு போன் போட்டு பாராட்டி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

45
Lyricist Vaali

Lyricist Vaali

அப்படி வாலி எழுதிய அந்த பாடல் வரிகளில் கண்ணதாசனை மிகவும் கவர்ந்தது, “கங்கைகொண்டான் என்மேல் கருணை கொண்டான், பாதி மங்கை கொண்டான் எந்தன் மனதைக் கொண்டான்... திரை திங்கை கொண்டான், நெஞ்சை திருடிக் கொண்டான்; இதை யாவையும் கொண்டான், எந்தன் மாலையும் கொண்டான்” என்கிற வரிகள் தான். இதைக்கேட்டதும் தேவாரத்தில் வரும் வரிகளை தான் பயன்படுத்தி இருப்பதாக நினைத்தாராம் கண்ணதாசன்.

55
Poet Kannadasan

Poet Kannadasan

பின்னர் தான் வாலி இந்த வரிகளை எழுதியது அவருக்கு தெரியவந்திருக்கிறது. உடனே வாலிக்கு போன் போட்டு அசத்திட்டய்யா என வாழ்த்தியதோடு தன்னுடைய கார் டிரைவரிடம் ஒரு பரிசு கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ என சொல்லி இருக்கிறார். வாலிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது என்பதால் அவருக்கு பிடித்த விஸ்கியை தன் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார் கண்ணதாசன். இதனால் பூரித்து போனாராம் வாலி.

இதையும் படியுங்கள்...  கோடி கோடியாய் காசு இருந்தும் விமானத்தில் செல்ல முடியாது... ரிஸ்க் எடுத்து மகனின் கனவை நிறைவேற்றிய நெப்போலியன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
நயன்தாரா விவகாரம்.. சி.வி.சண்முகத்துக்கு எதிராக கொதித்தெழுந்த நடிகர் சங்கம்.. பரபரப்பு அறிக்கை!
Recommended image2
நாள் முழுவதும் மதுவில் மூழ்கிய ஊர்வசி? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்! இணையத்தில் வைரலாகும் தகவல்!
Recommended image3
குஷியில் ரேவதி... கண்ணீரில் சந்திரா! சாமுண்டீஸ்வரியின் ஆட்டம் ஆரம்பம் - கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved