MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போதைப்பொருள் வியாபாரியுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார் நமீதா - கணவர் போலீசில் பரபரப்பு புகார்

போதைப்பொருள் வியாபாரியுடன் கள்ளத்தொடர்பில் உள்ளார் நமீதா - கணவர் போலீசில் பரபரப்பு புகார்

கன்னட திரையுலகில் தயாரிப்பாளராக வலம் வரும் சந்திரசேகர், தன்னுடைய மனைவி நமீதா மீது காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Jun 27 2023, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திரையுலகினர் போதைப்பொருள் வழக்கில் சிக்குவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்தியில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் அவரது மரணத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக கூறி விசாரணை நடத்தப்பட்டதில் அதில் ஏராளமான முன்னணி நடிகைகளும் சிக்கினர். இதையடுத்து தெலுங்கு திரையுலகிலும் போதைப் பொருள் தலைதூக்கி உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையி, தயாரிப்பாளர் கே.பி.செளத்ரி என்பவருக்கு அதில் தொடர்பு இருப்பது உறுதியானதை அடுத்து அவரை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

24
surekha vani

surekha vani

அவருடன் ஏராளமான நடிகைகளும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. தெலுங்கு நடிகை அஷு ரெட்டி, ஜோதி மற்றும் சுரேகா வாணி ஆகியோர் உடன் கே.பி.செளத்ரி போனில் அதிகளவில் உரையாடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைதான கே.பி.செளத்ரி உடன் நடிகை சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரீதா ஆகியோர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இதையும் படியுங்கள்... ஒரே நாளில் யூடியூப்பில் அதிக லைக்ஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சாங்ஸ்; என்ன லிஸ்ட் முழுக்க விஜய் பாட்டு தான் இருக்கு!

34
T Chandrasekhar

T Chandrasekhar

இப்படி டோலிவுட்டில் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்து வரும் நிலையில், கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல தயாரிப்பாளரான சந்திரசேகர், தனது மனைவி நமீதா போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி போதைப் பொருள் வியாபாரியான லக்‌ஷ்மிஷ் பிரபு உடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருந்ததாகவும், ஒருமுறை இருவரும் ஒரே வீட்டில் இருந்தபோது தானே கையும் களவுமாக பிடித்ததாக சந்திரசேகர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

44
T chandrasekhar

T chandrasekhar

சந்திரசேகரின் மனைவி நமீதா, தன் கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனவும், அவரது நண்பர்கள் அருண், ஹேமந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும் தன் பங்கிற்கு கணவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார் நமீதா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகும் நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ‘ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா’ திருப்பதிக்கு சென்ற விஜய்யை பார்க்க படையெடுத்து வந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved