MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2ஆவது திருமணமா? புகைப்படத்தை பகிர்ந்து விளக்கம் கொடுத்த மேக்னா ராஜ்!

2ஆவது திருமணமா? புகைப்படத்தை பகிர்ந்து விளக்கம் கொடுத்த மேக்னா ராஜ்!

 Meghana Raj second marriage Rumor: கணவர் இறந்து 5 வருடங்கள் கடந்த நிலையில் 2ஆவது திருமணம் குறித்த வதந்திக்கு மேக்னா ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

1 Min read
manimegalai a
Published : May 02 2025, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திருமணம் ஆன இரண்டே வருடத்தில் காதல் கணவர் மரணம்:

திருமணம் ஆன இரண்டே வருடத்தில் காதல் கணவர் மரணம்:

தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்தார். 10 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி 2 ஆண்டுகளில் இவரது காதல் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
 

24
மேக்னா ராஜ் விளக்கம்:

மேக்னா ராஜ் விளக்கம்:

இந்த நிலையில் காதல் கணவர் இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, மேக்னா ராஜ் ஆவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து மேக்னா ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். 

Related Articles

Related image1
குழந்தை பெற்றெடுத்த மேக்னா ராஜை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த நட்சத்திர ஜோடி..! வைரலாகும் புகைப்படம்..!
Related image2
இரண்டாவது திருமணம் குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசிய நடிகை மேக்னா ராஜ் - என்ன சொல்லீருக்காங்க தெரியுமா?
34
2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை

2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை

அதாவது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, எனக்கு நீயே வேண்டும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் கணவர் என்று பதிவிட்டுள்ளார். இனிமேல் அவரது வாழ்க்கையில் 2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது இந்த போஸ் மூலம் தெளிவாக தெரிகிறது. தனது மகனை உலகமாக நினைத்து இப்போது வாழந்து வருகிறார்.

44
மகனின் எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகிறேன்:

மகனின் எதிர்காலம் பற்றி தான் சிந்தித்து வருகிறேன்:

சிரஞ்சீவி சார்ஜா இறந்து ஒரு வருடத்தில் கூட 2ஆவது திருமணம் குறித்து வதந்திகள் வெளியானது. அப்போதும் 2ஆவது திருமணத்திற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதில், ஒரு சிலர் 2ஆவது திருமணம் செய்து கொள் என்கிறார்கள். இன்னும் சிலர் மகனுக்காக வாழ வேண்டும் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது நான் யார் சொல்வதை கேட்பது. நான் இப்போது மகனின் எதிர்காலம் அவனை பற்றி தான் சிந்தித்து வருகிறேன். எனது கணவர் இந்த தருணத்தை வாழ்ந்து விட வேண்டும் என்பார். அவர் கூறியது போன்று தான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
தமிழ் சினிமா
திருமணம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved