ரகசியம் சொன்ன கமல்... வாயை பிளந்த நிஷா... கண்ணீர் விட்ட அர்ச்சனா..!
நேற்றைய தினம், அணைத்து போட்டியாளர்களும் செய்த தவறுகளை சுட்டி காட்டி வெளுத்து வாங்கிய கமல், இன்னும் தன்னுடைய தொகுப்பாளர் பணியை செம்மையாக செய்கிறார்.
முதல் புரோமோவில், தற்போது டேஞ்சர் சோனில் உள்ள மூவரில் யார் தங்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்டதை பார்த்தோம்.
அப்போது பலர் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததை பார்க்க முடிகிறது. சனம்ஷெட்டி தங்க வேண்டுமென விரும்புவதாக ரியோ, அர்ச்சனா,நிஷா, ஆரி,ரம்யா, ஆகியோர் தெரிவித்தனர்.
அனிதா தங்க வேண்டும் என ஆஜித்தும், ஷிவானி தங்க வேண்டும் என சோம் மற்றும் பாலாஜியும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ரகசியம் சொல்லி நிஷாவை காப்பற்றியுள்ளார்.
ஆரபத்தில் சிலர் ஹெல்த் செக்அப் போனீர்கள் இல்லையா என கேட்க, அதற்க்கு நிஷா அந்த ரகசியத்தை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றியுள்ளோம் தயவு எய்து ஒரு பாராட்டு கொடுத்து விடுங்கள் என கமலிடம் கேட்கிறார்.
சரி நான் ஒரு ரகசியம் சொல்கிறேன் என கூறி நிஷா சேப் என தெரிவித்ததும் அவர் வாயை பிளர்த்து இது நிஜமா என்பது போல் ரியாக்ஷன் கொடுத்தார்.
அர்ச்சனா இதை கேட்டு அழுகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்கும் போது, நிஷாவை தொலைத்து விட்டோம் என்று நினைத்தோம். தற்போது மீண்டும் கிடைத்து விட்டார் என தெரிவிக்கிறார்.
இதை தொடர்ந்து, நீங்களும் நிஷாவை தேடிக்கொண்டு இருக்கிறீர்களா..? வெளியேற இருப்பவர்களும் தேடி கொண்டிருப்பதாக கமல் கூற... இந்த புரோமோ கலகலப்பாக முடிகிறது.