ஹனிமூனில் சல்லடை போல் உடை அணிந்து கிளுகிளுப்பூட்டும் காஜல்! கணவரை கட்டி பிடித்து ஒரே ரொமான்ஸ்!
அக்டோபர் 30 ஆம் தேதி திருமணமான, புதுமண தம்பதி, காஜல் அகர்வால் - கெளதம் கிட்சிலு ஜோடி தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில் அங்கு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
35 வயதிலும் தமிழ், தெலுங்கும், இந்தி சினிமாவை கலக்கியவர் காஜல் அகர்வால். கடந்த 30ம் தேதி தனது காதலரும், தொழிலதிபருமான கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்தார்.
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுடன் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த காஜல் - கெளதம் ஜோடி கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நல்ல படியாக முடிந்தது.
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி மும்பையில் உள்ள வீட்டில் குடியேறினார். இதற்கான கிரகபிரவேச நிகழ்ச்சியில் கூட இருவீட்டாரும் பங்கேற்றனர்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளதாலும், கொரோனா பிரச்சனை காரணமாகவும் காஜல் அகர்வால் தேனிலவை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதனை பொய்யாக்கும் விதத்தில் தற்போது, மாலத்தீவுக்கு கணவருடன் பிறந்துள்ளார் காஜல் அகர்வால்
மாலத்தீவில் இருவரும் தங்களுடைய தேனிலவை மகிழ்ச்சியாக அனுபவித்து வரும், சில புகைப்படங்களை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சல்லடை போன்ற சிவப்பு நிற உடையில் காஜல் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் வகையில் உள்ளது.
ஒய்யார கவர்ச்சியில் காஜல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
மேலும் பல ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.