- Home
- Cinema
- kaathuvaakula rendu kaadhal : உதயநிதி வசம் சென்ற ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... ரிலீஸ் அப்டேட்டும் வந்தாச்சு
kaathuvaakula rendu kaadhal : உதயநிதி வசம் சென்ற ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... ரிலீஸ் அப்டேட்டும் வந்தாச்சு
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.
அடுத்ததாக இந்நிறுவனம், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா (Nayanthara), கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், சமந்தா (Samantha) கத்திஜா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Samantha : உங்க கூட ‘இனப்பெருக்கம்’ செய்யணும்... நெட்டிசனின் ஆபாச கேள்விக்கு சமந்தா கொடுத்த நெத்தியடி பதில்!