ஜோதிகா செய்த உதவியால் புத்தம் புதிது போல் மாறிய மருத்துவமனை..! குவியும் வாழ்த்து..!
நடிகை ஜோதிகா தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட வெருதை பெற்றுகொண்டு சிறிது நேரம் பேசிய ஜோதிகா, கோயில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. தொடர்ந்து, ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா, அன்பை விதைப்போம் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவளிப்பதாகவும், அவருடன் எப்போதும் துணை நிற்பதாகவும் கூறியிருந்தார்.
“கோயில்களை போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப்பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்குச்செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளை படிக்காத காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை”எனவும் சூர்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஜோதிகா அவர் குறிப்பிட்ட தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அந்த நிதியில், மருத்துவமனை மிகவும் அழகாக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோதிக அந்த மருத்துவமனைக்கு செல்ல காரணமாக இருந்த படத்தின் இயக்குநர் இரா.சரவணன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்க்கு பலர் தற்போது தங்களுடைய வாழ்த்துக்களை ஜோதிகாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மருத்துவமனை புகைப்படம்
மருத்துவமனை புகைப்படம்
மருத்துவமனை புகைப்படம்