- Home
- Cinema
- என் உயிருக்கு உயிரான ராஹா! - மகன் பற்றி முதல்முறை மனம் திறந்த ஜாய் கிரிசில்டா! நெகிழ வைக்கும் உருக்கமான பதிவு!
என் உயிருக்கு உயிரான ராஹா! - மகன் பற்றி முதல்முறை மனம் திறந்த ஜாய் கிரிசில்டா! நெகிழ வைக்கும் உருக்கமான பதிவு!
Joy Crizildaa Emotional Post about Her Son Ragha: சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது மகன் ராஹா குறித்து ஜாய் கிரிசில்டா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 'நீ தான் என் பலம்' என அவர் பதிவிட்டுள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் மற்றும் வைரல் புகைப்படங்கள் இதோ!

Joy Crizildaa Instagram emotional story
நடிகரும், பிரபல சமையல் துறை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிசில்டாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்:
2023ஆம் ஆண்டு நண்பர் மூலமாக சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் இருவரும் காதலித்ததாகவும் தெரிவித்திருக்கும் ஜாய் கிரிசஸில்டா. மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு முதல் திருமணம் நடைபெற்று கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தன்னிடம் கூறி நம்ப வைத்ததாகவும், என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜூடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஜாய் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு கர்ப்பத்துடனே கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் செல்லும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து நெட்டிசன்களிடமிருந்துவிமர்சனங்களை பெற்றார்.
ஆண் குழந்தை பிறந்தது:
பின்னர் மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது. இதனைத்தொடர்ந்து ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்து விட்டது என்றும் ஆண் குழந்தை என்றும் குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் எனவும் அறிவித்தார். மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜனே எனக்கு பிறந்திருக்கிறார் என்றும் இணையத்தில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
Hansika Motwani: 15 வயதில் ஹீரோயின், கனவுக்கன்னி முதல் குடும்பத்தலைவி வரை - ஒரு சிறப்பு பார்வை!
டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை:
இந்நிலையில் இரு தரப்பினரும் கேட்டுக் கொண்டதால் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்னையில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. பரிசோதனை அனுமதி அளித்தது. சென்னை உயர் நீதிமன்றம். டி.என்.ஏ. பரிசோதனை எடுத்து வர சொல்லும்போது மாதம்பட்டி ரங்கராஜ், சென்னையில் இருந்து வெளியூருக்கு கண்காணித இடத்திற்கு ஓடிவிட்டார். அப்பொழுது இந்த பிரச்சனை மிகவும் பெருசாக உருமாறியது. மகனின் அப்பாவான தனது கணவரை காணவில்லை என்றும் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து தாருங்கள் என்றும் இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.தற்போது மீண்டும் ஜய் கிரிஸ்டிலா இனிப்பான தகவலை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Joy Crizildaa emotional post about her son Ragha
தனது மகனின் முகத்தை காண்பிக்காமல் மௌனம் காத்து இருந்தார் ஜாய் கிரிஸில்டா. தனது மகன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். அப்படியே அவங்க அப்பா மாதிரியே இருக்கிறார் இன்று இணையத்தில் லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்தது. மாதம்பட்டி ரங்கராஜ் போல சிவந்த நிறமும் குளு குளு கன்னங்களும் பார்ப்பதற்கே க்யூட்டாக இருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.