தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை கரம் பிடித்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா!
28 வயதான சஞ்சனா கணேசன் என்கிற தொகுப்பாளருக்கும் - ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கும் இன்று கோவாவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஒரு சில வாரங்களாக ஜஸ்ப்ரீத் பும்ராவின் திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தை சுற்றி வந்தது. இவரது திருமண சர்ச்சைக்குள், பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரனும் சிக்கினார். பின்னர் இருவரும் நண்பர் தான் என்றும், அனுபமா பரமேஸ்வரன் குஜராத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என அம்மா விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் 28 வயதான சஞ்சனா கணேசன் என்கிற தொகுப்பாளருக்கும் - ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கும் இன்று கோவாவில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சஞ்சனா கணேசன் ஒரு தமிழ் பெண். இவரின் தந்தை, கணேசன் இராமசாமி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், தற்போது மகாராஷ்டிராவில் வசித்து வருகிறார்
சஞ்சனா ஐபிஎல் போட்டிகளுக்காக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பிரபல ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சஞ்சனா தொகுப்பாளர் என்பதை தாண்டி, 2012 ஃபெமினா ஸ்டைல் திவா' பேஷன் ஷோவில் பங்கேற்றிருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா புனே போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அதேபோல் 2014 மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராகவும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் சஞ்சனா கணேசன் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடந்து முடிந்துள்ளது. பிங்க் நிற உடையில் வெளியாகியுள்ள இவர்களது திருமண புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.