MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா கீழடி வந்த சீக்ரெட் காரணம் இதுதானாம்? புட்டு புட்டு வச்ச பயில்வான்.. பந்தாடும் ரசிகர்கள்!

சூர்யா கீழடி வந்த சீக்ரெட் காரணம் இதுதானாம்? புட்டு புட்டு வச்ச பயில்வான்.. பந்தாடும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது, பரபரப்பாக பார்க்கப்பட்டு ஒரு சில சர்ச்சைக்குள்ளான நிலையில், இதற்க்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்பதை புட்டு புட்டு வைக்க..  ரசிகர்கள் கண்டமேனிக்கு இவரை திட்டி பந்தாடி வருகிறார்கள். 

2 Min read
manimegalai a
Published : Apr 08 2023, 12:41 AM IST| Updated : Apr 08 2023, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, ஏப்ரல் 1ந் தேதி கீழடி அருங்காட்சியகத்தை, மனைவி ஜோதிகா, தன்னுடைய குழந்தைகள், அப்பா சிவக்குமார் மற்றும் அம்மாவோடு பார்வையிட்டார். இது குறித்த சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில், வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.
 

28

பின்னர் ஒரு சில சர்ச்சைகளுக்கும், இந்த நிகழ்வு வழிவகுத்தது. அதாவது, வழக்கமாக காலை 10 மணிக்கு தான் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட டிக்கெட் வழங்கப்பட்டு, பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்ட 'வாரிசு' உங்கள் இல்ல திரையில்! முழு விவரம் இதோ...
 

38

ஆனால் கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட, நடிகர் சூர்யா குடும்பத்தினர் வந்ததை அறிந்து,  விதிமுறைகளை மீறும் வகையில்,  காலை 9 மணிக்கே கீழடி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. சூர்யா குடும்பத்தினருடன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு அங்குள்ள பழங்கால பொருட்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.
 

48

அருங்காட்சியகத்திற்குள் சூர்யாவின் குடும்பத்தினர், பார்வையாளர்கள் நேரத்தை கடந்தும்... அதாவுக்கு 10 மணிக்கு மேலாகியும் உள்ளே இருந்ததால்,  அவர்கள் பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வரை, பொதுமக்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூர்யா குடும்பத்தால் விதிமுறையை மீறப்பட்டதாக  மதுரை பாஜகவினர் சூர்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்து பரபரப்பையும் ஏற்படுத்தினர். 
 

58

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்தும்... இதன் பின்னணி குறித்தும் பேசி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார் பயில்வான். இதுகுறித்து பேசிய அவர் " கீழடி அருங்காட்சியகத்திற்குள் செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேஷன் உடன் இருந்ததால் யாருமே சூர்யா குடும்பத்தினரிடம் கட்டணம் வசூலிக்க வில்லை. அந்த பகுதியை சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், அப்பகுதிக்கு வந்த மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்தார்கள். இது பிரச்சனை ஆகியும் சூர்யா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! 42 வயது நடிகை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

68

உண்மையில் சூர்யா தன்னுடைய அவப்பெயரை மாற்றிக்கொள்வதற்காகத்தான் கீழடிக்கு வந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடியேறிவிட்டார். இப்போது மும்பையில் தான் தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனால் ரசிகர்களும், இயக்குநர்களும் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று நினைத்த காரணத்தினால், அந்த அவப்பெயரை அழிப்பதற்காகத்தான் அப்பா, அம்மாவை கீழடிக்கு அழைத்து வந்துள்ளார். 

78

அதே போல் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக கீழடிக்கு சூர்யா வந்ததாக கூறப்படும் நிலையில், எம்பி வெங்கடேஷனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?  அது மட்டுமில்லாமல் அங்கு அத்தனை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் நீங்கள் எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன்? என பயில்வான் ரங்கநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

49 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் பிரசாந்த்..! எப்போது கல்யாணம்? தந்தை கூறிய குட் நியூஸ்!

88

பயில்வானின் இந்த வீடியோவை பார்த்த சிலர் சரியாக தானே கேள்வி கேட்கிறார் என ஆதரவாக கமெண்ட் போட்டு வந்தாலும், சூர்யாவின் ரசிகர்கள்... சூர்யாவை நீங்கள் நினைப்பதெல்லாம் பேச கூடாது. அப்படி பேசுனா நீங்க புளுகு மூட்டை பயில்வான். என கொஞ்சம் காட்டமான வார்த்தைகளை பதிவிட்டு பந்தாடி வருகிறார்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved