கார் விபத்தில் சிக்கிய நடிகர் ராணாவின் தம்பி?... அதிர்ச்சியில் தந்தை கொடுத்த விளக்கம்...!
ராணாவின் தம்பி அபிராம் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் ராணா. நீண்ட நாட்களாக முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா கடந்த 8ம் தேதி காதலி மிஹீகா பஜாஜைக் கரம் பிடித்தார்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் நெருங்கி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று வரையிலும் ராணா - மிஹீகா பஜாஜ் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
புதுமண தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து மழை பொழித்து வரும் நிலையில், ராணாவின் சகோதரர் அபிராம் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிகொண்டாவில் பஞ்சவாடி காலனி என்ற இடத்தில் அவருடைய கார், எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காருக்கு அதிக சேதம் ஏற்பட்டிருப்பினும் ஓட்டுநரும், ராணாவின் தம்பியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணாவிற்கு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஆனால் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு, அபிராம் எவ்வித விபத்திலும் சிக்கவில்லை என்றும், வீணாக வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.