“இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம்” பாகத்திற்கு டைட்டில் இதுவா?... இது இன்னும் ஏடாகூடமா இருக்கே....!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் கசிந்துள்ளன.
'ஹரஹர மஹாதேவகி' அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை இரண்டாவதாக இயக்கினர்.
டைட்டிலில் ஆரம்பித்து டிரெய்லர், வசனம் என அனைத்துமே டபுள் மீனிங் அர்த்தங்கள் நிரம்பி வழிந்ததால், தமிழகத்தில் இந்த படத்தை திரையிட கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்தது.
கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க இளசுகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளம் தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் நடித்த யாருமே இந்த படத்தில் இல்லை. முழுக்க முழுக்க வேறு நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் இரண்டாம் மாதத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
தற்போது இரண்டாம் பாகத்திற்கு "இரண்டாம் குத்து" என டைட்டில் வைத்து இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
ஹீரோயின்களாக கரிஷ்மா மற்றும் அக்ரிதி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள். மேலும் முக்கிய ரோல்களில் டேனி, மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, சாம்ஸ், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.