இந்த செல்ஃபிக்கு பின்னாடி இப்படியொரு கதை இருக்கா?... “மாஸ்டர்” பிரபலம் வெளியிட்ட உண்மை...!
இந்த செல்ஃபி போட்டோ குறித்த சுவாரஸ்யான சம்பவம் ஒன்றை மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்து வந்த போது, தளபதி விஜய்யை பார்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிய ஆரம்பித்தனர்.
இதையடுத்து பேருந்தின் மீதேறி ரசிகர்களைப் பார்த்து கையசைத்த தளபதி, தனது ரசிகர்களுடன் மாஸ்டர் செல்ஃபி ஒன்றை எடுத்துக் கொண்டார்.
அந்த செல்ஃபியை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது தாறுமாறு வைரலானது. பல்வேறு சாதனைகளை படைத்த செல்ஃபி போட்டோ இப்போது 2020ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த செல்ஃபி போட்டோ குறித்த சுவாரஸ்யான சம்பவம் ஒன்றை மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அன்றைய தினம் அர்ஜுன் தாஸ் அங்கு இல்லையாம். மறுநாள் வந்துள்ளார். அன்று ஸ்பாட்டிற்கு வந்தவருக்கு விஷயம் தெரிய வர உடனடியாக விஜய்யிடம் சென்று செல்ஃபியை காட்டும் படி கேட்டுள்ளார்.
உடனடியாக தளபதியும் தனது செல்போனில் இருந்த செல்ஃபியை அர்ஜுன் தாஸிடம் காட்டியுள்ளார். அதன் பிறகு தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை முதன் முறையாக பார்த்த நபர் என்ற பெருமை அர்ஜுன் தாஸுக்கு கிடைத்துள்ளது.